உயர்கல்வியானது, தனிநபர்களின் சாதனையை மட்டும் நோக்காகக் கொள்ளாது, பிரதானமாக சமுதாயத்தின் பொருளாதாரச் செழிப்பினை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
அரசாங்கத்தின் “மஹிந்த சிந்தனை” கொள்கையின்கீழ் “சகலருக்குமான பல்கலைக்கழகங்கள்” நிகழ்ச்சித்திட்டமானது, உயர்கல்வி பிரிவில் உயிர்ப்பான முறையில் செயலாக்கப்படும்.
அரசாங்கமானது, நாட்டின் உயர்தர கல்வியில் சித்திபெறும் அனைத்து மாணவர்களினாலும் உயர்கல்வியைத் தொடர்வதற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கான சவாலை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. இக்கொள்கையின்கீழ், பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையானது, புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதன்மூலமும், பல்கலைக்கழகங்களினதும் ஏனைய உயர்கல்வி நிறுவனங்களினதும் வசதிகளை அதிகரிப்பதன்மூலமும் அதிகரிக்கப்படும்.
மேலும்.... |